ஞாயிறு, 19 ஜூலை, 2009

மைக்ரோசொப்ட் நிறுவனமும் பில் கேட் அவர்களும்...........

பில் கேட் [William Henry Bill Gates III]

என்றால் இன்று தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய,பிரசித்திப் பெற்றவர் வேறு யாரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருள் வல்லுனரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆகிய பில் கேட் அவர்களுக்கு தற்போது வயது 52 ஆகிறது.

உலக பணக்காரர்

கள் வரிசையில் பில் கேட்வர்களே தொடர்ந்தும் பல வருடங்களாக முதல் இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்

லியன்களை தாண்டியிருந்தது.

இன்று இவரது நிறுவனமான மைக்ரோசொப்ட்நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள் 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.

ஆம்! இத்தன்னிகரற்றச் சாதனையாளரான பில் கேட்அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முறை பார்ப்போம்.

பில் கேட் அவர்கள் 1955 ஒக்டோபர் 28ம் திகதி அமெரிக்கா, சியேட்ல்,வொசிங்டன் [America, Seattle,

Washington] எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்சு' இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயார் பெயர் 'மேரி மேக்சுவெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான 'பில் கேட்' தனது சிறு வயதிலேயே கணிதம்,அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கினார்.

தன் பதி்மூன்றாவது வயதில் சியாடிலில் சிறந்துக் காணப்பட்ட இவர் லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கே கல்வி கற்கும் போதே இவரது கணனி ஆர்வம் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயதிலேயே மென் பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார்.

தனது 13ம் வயதிலேயே மெ

ன்பொருள் எழுத தொடங்கினார்.

பிறகு 1973ல் ஆவர்ட் [Harvard University] பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அவரது நண்பரான இசுடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்து படித்தார். இக்காலப்பகுதியில் இவரது படிப்பு பாதியில் இடைநிறுத்தும் அளவிற்கு இவரது கணனி ஆர்வம் மிகுந்து காணப்பட்டது.

ஆவர்ட் பல்கலைக்கழக படிப்பு முற்றுப்பெற்ற பின்பு தனது சிறு வயது நண்பர் பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை 1975ல் ஆரம்பித்தார்.

கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்தது. இதனால் இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொ

ருள்களை எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள்,நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு நிலை மாறியுள்ளது.

கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிசுடம்) பொருத்தவரையிலும் 85%சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே

உள்ளன.

மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான விண்டோசு விசுடா” 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600கோடி டொலர்கள் செலவில் 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்சு அவர்கள

தும், அவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கு முதன்மையானது என்றால் மிகையாகாது.

பொருளாதாரத்துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் பொருளாதாரத் தந்தை என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம்.

இன்று நாமெல்லாம் கணனியை பாவிப்பதற்கு வித்திடவர் இவர் என்றே கூறவேண்டும். பொதுமக்கள் மத்தியில் கணனியை அறிமுகப்படுத்தியதற்கான பில் கேட் அவர்களினதும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கு அளப்பரியது.


பில் கேட் பற்றி இன்னுமொரு தகவல்

பில் கேட் அவர்களும்

கொலின் எமிங்வே (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய“Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றன.

பில் கேட்டின் முதலாவது நூலான “The Road Ahead' 1995 ஆண்டு வெளியாகிப் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்சில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில் தொடர்ந்தும் இவரது நூல் ஏழு வாரங்கள் முன்னணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துத்

துறையிலும் தடம் பதித்தவர் பில் கேட் அவர்கள். இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி அபிவிருத்திக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

இதைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார

அபிவிருத்திக்காக அறக் கட்டளையொன்றை நிறுவி அதற்காக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கி செயல்படுத்தியும் வருகின்றார். இதை“ பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனும் பெயரில் இவரது மனைவியாரும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக